இந்தியாவில் பங்கு வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு நிலாக்காலம்!
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பதை விட இந்திய பங்கு வர்த்தக நிறுவனங்களில் வேலை பார்ப்பது புத்திசாலித்தனமாக உள்ளது. ஹாங்காங் நாட்டின் CLSA நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த வாசுதேவ் ஜகன்னாத் இந்தியா இன்போலைன் நிறுவனத்தில் சேர்ந்ததால் அவர் பாக்கெட்டில் இப்போது 89 கோடி ரூபாய்!
வேலையில் சேர்வதற்கான signing bonus மட்டுமே 2.7 மில்லியன் டாலர்கள்! இந்திய பங்கு சந்தை வானத்தில் பறக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
வெளிநாட்டு பங்கு வர்த்தக நிறுவனங்களில் (Goldman, J.P.Morgan, etc.,) உயர் பதவியில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு திரும்ப ஆசைப்பட்டால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்புள்ள தளம்: Indian brokers ditch big names
கொசுறு செய்தி: சமீபத்தில் என்னை யோசிக்க வைத்த ஒரு தளம். இந்த செய்தி சம்பந்தமான உங்கள் கருத்துகளை அந்த தளத்தில் எழுதுங்கள்.
Tuesday, September 25, 2007
இது ஒரு நிலாக்காலம்
Thursday, September 13, 2007
மென்பொருள் வணிகத்திற்கான நல்ல ஐடியா உங்களிடம் உள்ளதா?
உங்களிடம் நல்ல ஐடியா இருந்து அதை செயல்படுத்த தேவையான பணம் இல்லாவிடில், இவர்களை தொடர்பு கொண்டு பாருங்கள்.
இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். எல்லோரும் கம்ப்யூட்டர் துறையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
என்னைப் பொறுத்த வரையில் கம்ப்யூட்டர் துறையை விட டெக்ஸ்டைல்ஸ் பெட்டராக தெரிகிறது! பத்து வருடங்கள் கழித்து கம்ப்யூட்டர் துறை நிபுணர்கள் அதிகமாக தேவைப்படாமல் போகலாம். உடுத்த உடை தேவைப்படாமல் போகாது!
Tuesday, September 11, 2007
இருபதாயிரம் டாலருக்கு வீடுகள்!
அமெரிக்காவில் வீடு விலைகள் சரிந்த பிறகும் உங்களால் வீடு வாங்க முடியவில்லையென்றால், கொஞ்சம் வடக்குப் பக்கமாய் தேடிப் பாருங்கள். கனடா நாட்டில் உள்ள Newfoundland மாகாணத்தில் நான்கு அறைகள் கொண்ட வீடு $20,000க்கு (8 லட்ச ரூபாய்) கிடைக்கிறதாம்!
ஒரு கார் வாங்கும் விலைக்கு ஒரு வீடா?! உண்மை தான்.
செப்டம்பர் 11, 2001-ல் நடந்த தீவிரவாத தாக்குதலினால் அமெரிக்க விமான நிலையங்கள் அன்று காலை மூடப்பட்டு விட்டன. அதனால் அமெரிக்காவுக்கு வர வேண்டிய 38 விமானங்கள் Newfoundland மாகாணத்தில் உள்ள Gander என்ற விமான நிலையத்தில் இறக்கப் பட்டன. அதில் பயணம் செய்த 7000 பயணிகள் வேறெங்கும் செல்ல முடியாமல் இந்த மாகாணத்தில் ஒரு வாரம் காத்துக் கிடந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இந்த மாகாண மக்கள் காட்டிய பரிவும் அன்பும் இந்த மாகாணத்தின் புகழை பரப்ப உதவியது.
இந்த மக்களின் நல்ல உள்ளங்கள் மட்டுமல்லாது இயற்கையான சூழ்நிலையும் பலரை கவர்ந்திருக்கிறது. அமெரிக்கர்கள் பலர் இங்கு வீடு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 
இந்த மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வீடு விலை குறைவாகத்தான் இருக்கிறது. கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள் $40,000க்கு (16 லட்ச ரூபாய்) கிடைக்கிறதாம்!
ஒரு பக்கம் இது பற்றிய செய்தி படிக்கும் போது மறுபக்கம் அமெரிக்க ரியல் எஸ்டேட்டால் பாதிக்கப்பட்ட சிலரை பற்றி படிக்க நேர்ந்தது. அமெரிக்க ரியல் எஸ்டேட் கீழே விழாது என்ற குருட்டு நம்பிக்கையில் பணம், மானம் இரண்டையும் இழந்த சூதாட்டக்காரரை பற்றி படித்து ஆச்சரியப்பட்டேன். இவர்கள் மாதிரி ஆட்களுக்கு கடன் கொடுத்தால் வங்கிகள் திவாலாகாமல் என்ன செய்யும்?
வங்கிகளின் குறுக்கு புத்தியாலும், வங்கிகளை கட்டுப்படுத்த தவறிய அரசாங்க விதிமுறைகளாலும் இப்போது அமெரிக்க பொருளாதாரமே லேசாக ஆட்டம் காண்கின்றது.
தன் தகுதிக்கு மீறி வீடுகளை வாங்கியவர்களை பாதுகாப்பதற்கு எங்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கலாமா என்று பலர் கோபத்தில் இருக்கின்றனர். அவர்களின் கண்ணோட்டத்தை இங்கு பாருங்கள். அந்த கோபத்தில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களின் கருத்துகளை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
Related Link: LA Land
பின் குறிப்பு: கடந்த பல "மாதங்களாக" தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு வலைதளத்தின் ஸ்பாம் தொல்லை தாங்காமல், அனானிமஸ் பின்னூட்டங்களை off செய்ய வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும்.
